Wednesday, May 13, 2009

இலங்கைத் தமிழர்கள் -A different comment in Dinamalar

ஈழத் தமிழர்கள் இதுவரை தமிழகத்துக்காக என்ன செய்தார்கள். இந்தியத்தமிழர்களுக்காக என்ன செய்திருக்கிறார்கள். இந்தியாவை முன்னேற்றப் பாதையில் கொண்டு சென்ற ஒரு இந்தியப் பிரதமரை பிரபாகரனின் தனிப்பட்ட வஞ்சம் தீர்ப்புக்காக கொன்றார்கள். பல தமிழ் தலைவர்களை கொன்றார்கள். இந்திய அமைதிப் படை இலங்கை சென்றிருந்த போது சிங்களப் படையுடன் சமரசமாகி இந்தியப் படையினரை வஞ்சம் தீர்த்தார்கள். இப்போது கூட பல வெளிநாடுகளில் இருக்கும் இலங்கை தமிழர்கள்.இண்டர்நெட்டிலும். பிளாக்கிலும் தமிழ முதல்வரை மிக அசிங்கமாக பேசியும். சோனியா காந்தியையும் சொல்ல தகாத வார்த்தைகளில் திட்டியும் வருகின்றனர். உண்ட வீட்டிற்கு இரண்டகம் செய்யும் செயல் இது. நாம் யாராவது நடுநிலைமையாக எழுதினாலோ. பிரபாகரன், புலிகளை ப் பற்றி எழுதினாலோ மிக அசிங்கமாக திட்டுவார்கள் இதுதான் இன்று இலங்கை தமிழர்கள் செய்வது. இன்றைக்கு தான் செய்த விதைக்கு வினையருத்துக் கொண்டிருக்கின்றாரகள்.இதற்கு ஏன் இந்தியாவையும், தமிழகத்தையும் நோகின்றார்கள் என்று தெரியவில்லை. இது வேறு ஒரு நாட்டின் பிரச்னை. இந்திய இறையான்மைக்கு உட்பட்டு இந்திய அரசு என்ன செய்ய முடியுமோ அதை செய்கிறது. அண்டை நாட்டை பகைத்துக் கொள்ள முடியாமல் சில உதவிகளையும் செய்திருக்கிறது. நாம் செய்யவில்லை என்றாலும் சைனாவும். பாகிஸ்தானும் உதவிகள் செய்யதான் போகிறார்கள். அவர்களாகவே துப்பாக்கி தூக்கினார்கள் இதன் நல்லது கெட்டதுகளை அவர்கள் அனுபவிக்கத்தாக் வேண்டும். இந்தியாவையோ, தமிழகத்தையோ கேட்டுக் கொண்டுதான் இலங்கை தமிழர்களோ, புலிகளோ இதுவரை செயல்படவில்லை. இனியும் செயல்படப் போவதில்லை இலங்கை பிரச்னைக்காக இந்திய இறையான்மையை விட வேணடாம். தமிழகத்திலும் தேவையற்ற கலவரங்கள் வேண்டாம். அமைதிப் பேச்சுவார்த்தைக்கா நாம் உதவலாம்.ஆயுதத்தால்தான் தீர்க்க முடியும் என்றால் அவர்களே பார்த்துக கொள்ளட்டும் நம்மால் முடிந்த உதவியை ஈழ மக்களுக்கு செய்வோம். புலிகளுக்கு அல்ல.இது மட்டுமல்ல வெளிநாடுகளில் வாழும் எத்தனை இலங்கை தமிழர்கள் உக்கிர போர் நடக்க ஆரம்பித்ததும். உடனடியாக இலங்கை வந்து போரில் கலந்து கொண்டார்கள் எனறு சொல்லுங்கள் பார்ப்போம். இன்டர்நெட்டில் தமிழக தலைவர்களை திட்டுவதோடு சரி.

தமிழகத்தில் தேவையில்லாத பிரச்னை ஒருபுறம் இருக்குட்டும். இதுவரை புலம்பெயரந்த இல்ங்கை தமிழர்கள் உக்கிரப் போர் என்றவுடன் உடனடியாக வெளிநாடுகளிலிருந்து கிளம்பி வந்து மண்ணிற்காகவும், மக்களுக்காகவும் பேராட எத்தனை பேர் கிளம்பி வந்தார்கள் என்று சொல்லுங்கள் பார்ப்போம். இவர்கள் இன்டர்நெட்டிலும், பிளாக்கிலும் சுலபமாக நாலு பதிவுகள், புலிகளைப் பற்றியோ நடுநிலையாகவோ பேசுபவர்களை தமிழக தமிழர்கள கேவலமாக திட்டுவது இதுதான் நடைபெறுகிறது.

இலங்கைத் தமிழர்கள் தமிழர்களையும். தமிழகத்தையும் தங்களுக்காக பயன்படுத்திக் கொண்டார்களே தவிர வேறு எதுவும் செய்து விடவில்லை. இங்கிருந்து கடத்துவதற்காகவும், சொத்துக்கள் வாங்கவும், போலி பாஸ்போட் எடுக்கவும்,இப்படி நிறைய. நடுநிலையாகவோ, புலிகளைப்பற்றி குறைவாகவோ யாராவது எழுதினால் மிக கேவலகமாக இணையங்களில் திட்டுவார்கள். இலங்ளை தமிழர்கள் நடத்தும் களங்களில் நாமெல்லாம் எதையும் பதித்துவிட முடியாது. ஆனால் நமது தமிழக களங்களில் இவர்கள் வந்து புலிகளின் கொடியை தாங்கிப் பிடிக்க தவறுவதில்லை. ஈழ பொதுமக்கள் பாவம் அவர்களுக்கு உதவ வேண்டும். புலிகளுக்கு உதவ தேவையில்லை.
by S Sara,India
Posted on மே 13,2009,12:27 IST

No comments:

Post a Comment